தமிழ்நாடு செய்திகள்

திருச்சி மரக்கடையில் விஜய் பிரச்சாரம்: நிபந்தனைகளை ஏற்ற த.வெ.க- அனுமதி அளித்த காவல்துறை

Published On 2025-09-10 16:59 IST   |   Update On 2025-09-10 16:59:00 IST
  • ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.
  • தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.

தமிழகம் முழுவதும் வரும் 13-ந்தேதி சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.

இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இன்று காலை மனு அளித்த நிலையில், மாலை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

ஆனால், ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்திற்கு காவல்துறை விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் தவெகவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.

இதைதொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு துணை ஆணையர், பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்தார்.

விஜய், வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News