தமிழ்நாடு செய்திகள்

உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்! - உதயநிதி மே தின வாழ்த்து

Published On 2025-05-01 08:13 IST   |   Update On 2025-05-01 08:13:00 IST
  • மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!
  • உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.

மே 1 உழைப்பாளர் தினத்தையொட்டி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளர். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

மே 1 - உழைக்கும் மக்கள் தம் உரிமைகளை வென்றெடுத்த பொன்னாள்!

உலக உழைப்பாளர் தினமான இன்று உழைப்பால் உலகை இயக்கும் அத்தனை தோழர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்றைக்கு உழைப்பாளிகள் சிந்திய ரத்தத்தின் பலனே இன்றைக்கு உழைப்பாளர்களுக்கு கிடைத்துள்ள உரிமைகள்.

உழைப்பாளர் தினத்தன்று ஊதியத்தோடு விடுமுறை - மே தின பூங்கா - தொழிலாளர் நல வாரியம் என முத்தமிழறிஞர் கலைஞர் செய்த சாதனைகள் ஏராளம்.

கலைஞர் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் அரசும் தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

உழைப்பாளர் ஒற்றுமை ஓங்கட்டும்! உழைக்கும் மக்களின் உரிமைகளை என்றென்றும் பாதுகாப்போம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News