தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவில் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க மகளிரின் பங்கும் காரணம் - உதயநிதி

Published On 2025-06-11 12:22 IST   |   Update On 2025-06-11 12:22:00 IST
  • பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.
  • இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

* பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.

* பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது தி.மு.க.

* தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

* மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன.

* இந்தியாவில் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க மகளிரின் பங்கும் காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News