தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் தீவிரமடைந்த பருவமழை: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்

Published On 2025-10-28 11:11 IST   |   Update On 2025-10-28 11:11:00 IST
  • பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
  • சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.

சென்னை:

தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி,

* தகுந்த வழிகாட்டுதல்களை கடைபிடித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

* பணிமனைகளில் நீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.

* பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

* சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.

* டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் நீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்பே டீசல் நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News