தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாட்டில் தீவிரமடைந்த பருவமழை: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தல்
- பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி,
* தகுந்த வழிகாட்டுதல்களை கடைபிடித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
* பணிமனைகளில் நீர் தேங்காத வகையில் வடிகால்கள் சரிவர இருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டும்.
* பேருந்துகளில் நீர் ஒழுகுதல் உள்ளிட்ட புகார்கள் வந்தால் கிளை மேலாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
* சாலைகளில் மின்கம்பி, மரங்கள் விழுந்துள்ளதா என்பதை கண்காணித்தப்படி கவனமாக பேருந்தை இயக்க வேண்டும்.
* டீசல் பங்க் சேமிப்பு கிடங்கில் நீர் கலக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்பே டீசல் நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.