தமிழ்நாடு செய்திகள்
தாம்பரத்தில் தடம் புரண்ட ரெயில்- தென்னக ரெயில்வே விளக்கம்
- தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு.
- ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
தாம்பரத்தில் யார்டுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரெயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், தாம்பரம் யார்டில் காலி சரக்கு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டது குறித்து தென்னக ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.
மேலும் கூறுகையில், " என்எம்சி ரேக்கின் 3 காலி சரக்கு ரெயில் பெட்டிகள் (8,9,10வது வேகன்கள்) தாம்பரம் யார்டுக்கு மாற்றப்படும்போது தடம் புரண்டன.
யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. தடம் புரண்ட சம்பவத்தால் ரெயில்களின் சேவையும் பாதிக்கவில்லை.
சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என கூறப்பட்டுள்ளது.