தமிழ்நாடு செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு அனுமதி- உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

Published On 2025-07-22 10:46 IST   |   Update On 2025-07-22 10:46:00 IST
  • தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
  • கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை அடிவாரத்தில் அமண லிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்தி அணை, நீச்சல் குளம், மலை மீது பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் இங்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 2 நாட்களாக சாரல் மழை பெய்து பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் மழை பொழிவு குறைந்ததால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் வழக்கத்தை விட அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அங்கு கோவில் ஊழியர்கள்-வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News