சென்னையில் நாளை (18.07.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- ராஜராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (18.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
போரூர்: வயர்லெஸ் ஸ்டேஷன் சாலை, ஆர்.இ.நகர் 5வது தெரு, ஜெய பாரதி நகர், ராமகிருஷ்ணா நகர் 1-வது அவென்யூ முதல் 7-வது அவென்யூ வரை, ரம்யா நகர், உதயா நகர், குருசாமி நகர், ராஜராஜேஸ்வரி நகர், சந்தோஷ் நகர், கோவிந்தராஜ் நகர், காவியா கார்டன், ராமசாமி நகர்.
பெசன்ட் நகர்: கங்கை தெரு, அப்பர் தெரு, அருண்டேல் கடற்கரை சாலை, டைகர் வரதாச்சாரி ரோடு, கடற்கரை ரோடு, திருமுருகன் தெரு, காவேரி தெரு, திடீர் நகர், வைகை தெரு, ருக்மணி சாலை விரிவு, ஓடைக்குப்பம், அஷ்டலட்சுமி கார்டன், பாரி தெரு, பாண்டியம்மன் கோவில் தெரு, கம்பர் தெரு.