தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (21.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-05-20 09:35 IST   |   Update On 2025-05-20 09:35:00 IST
  • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
  • லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு.

சென்னை:

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் நாளை (21.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, போரூரில், முத்து நகர், எம்ஆர்கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News