தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் நாளை (17.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்...

Published On 2025-05-16 11:09 IST   |   Update On 2025-05-16 11:09:00 IST
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
  • கமலா நகர், கிருஷ்ணா நகர், காமாட்சி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, கிருஷ்ணவேணி நகர், ஏஜிஎஸ் காலணி.

சென்னை:

சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னையில் நாளை (17.05.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

அதன்படி, சென்னீர்குப்பம் பகுதிகளில் கண்ணபாளையம், பாரிவாக்கம், ஆயில்ச்சேரி, பிடாரிதாங்கல், கொளப்பஞ்சேரி, பாணவேடுதோட்டம்.

ராயாபுரம்: ராயலா நகர் 1வது மற்றும் 2வது தெருக்கள், பாரதி சாலை, வள்ளுவர் சாலை சந்திப்பு மற்றும் வடக்கு, ஆண்டவன் நகர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், பாரதி நகர், திருமலை நகர், சபரி நகர், ஸ்ரீ ராம் நகர், முகலிவாக்கம் பகுதி, சுபஸ்ரீ நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, கமலா நகர், கிருஷ்ணா நகர், காமாட்சி நகர், லட்சுமி நகர், ஆசிரமம் அவென்யூ, கிருஷ்ணவேணி நகர், ஏஜிஎஸ் காலணி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News