தமிழ்நாடு செய்திகள்

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: தேடப்பட்டு வந்த 2 பேர் கைது

Published On 2025-01-26 10:16 IST   |   Update On 2025-01-26 10:16:00 IST
  • தலைமறைவான நபா்களை கைது செய்ய பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
  • என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை:

தஞ்சாவூா் மாவட்டம் திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சோ்ந்தவா் வ.ராமலிங்கம். பா.ம.க. முன்னாள் நகரச் செயலாளர். இவா், அந்தப் பகுதியில் சிலா் மதமாற்றத்தில் ஈடுபட்டதைக் கண்டித்தாா்.

இந்த நிலையில், ராமலிங்கம், 2019 பிப்ரவரி 5-ந் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு சென்ற போது வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். திருவிடைமருதூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக, குறிச்சிமலை பகுதி எச். முகமது ரியாஸ், திருபுவனம் எஸ். நிஸாம் அலி, ஒய். சா்புதீன், என். முகமது ரிஸ்வான், திருவிடைமருதூா் ஏ. அசாருதீன், திருமங்கலக் குடி முகமது தவ்பீக், முகமது பா்வீஸ், ஆவணியாபுரம் தவ்ஹித் பாட்சா, பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலரும், காரைக்கால் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த வருமான ஏ. முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக காவல்துறை வழக்கின் ஆவணங்களை தேசிய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைத்தது.

கொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புதிதாக ஒரு வழக்கை பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

இதன் பின்னா் தேசிய புலனாய்வு முகமை இவ்வழக்குத் தொடா்பாக, மேலும் பலரை கைது செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக தேடப்பட்டு வரும் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் திருப்புவனம் வடக்கு முஸ்லிம் தெரு ஹா.முகமது அலி ஜின்னா (37), கும்பகோணம் மேலக்காவேரி பகுதி மு.அப்துல் மஜீத் (37), தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வடக்குமாங்குடி மு.புா்ஹானு தீன் (31), திருமங்கலகுடி தா.சாகுல் ஹமீது (30), அ.நபீல் ஹாசன் (31) ஆகிய 5 போ் குறித்து தகவல் தெரிவித்தால் ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என்ற வீதம் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புல னாய்வு முகமை 2021-ம் ஆண்டு அறிவித்தது.

வழக்கில் தலைமறைவாக இருந்த 5 போ் உள்பட 18 போ் மீது என்.ஐ.ஏ. அதிகாரிகள், சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். அதேநேரத்தில் தலைமறைவான நபா்களை கைது செய்ய பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், முகமது அலி ஜின்னா கடந்த நவம்பர் 15-ந்தேதி கைது செய்யப்பட்டாா்.

இவ்வழக்கில் முக்கிய எதிரிகளாக கருதப்பட்ட அப்துல் மஜீத், சாகுல் ஹமீது ஆகிய இருவரையும் சென்னையில் கைது செய்ததாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இருவருக்கும் தொடா்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள எஞ்சிய நபா்களை கைது செய்யும் நடவடிக்கையில் என்ஐஏ தீவிரம் காட்டி வருகிறது.

Tags:    

Similar News