தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக திகழ இருமொழிக் கொள்கைதான் காரணம்- அன்பில் மகேஷ்

Published On 2025-09-22 17:42 IST   |   Update On 2025-09-22 17:42:00 IST
  • மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
  • இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.

சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தமிழக அரசு முமொழிக் கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் கல்வி நிதி வழங்க முடியும்" என்று பேசினார்.

அவரது கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில்," தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்.

இந்த இருமொழிக் கொள்கையில் படித்த தமிழர்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்" என்றார்.

Tags:    

Similar News