தமிழ்நாடு செய்திகள்
பெண்கள் பாதுகாப்பில் சமரசமே கிடையாது- தமிழச்சி தங்கபாண்டியன்
- அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.
- குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.
சென்னை:
தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அண்ணா பல்கலை. விவகாரத்தை அரசியலாக்குகின்றனர்.
* குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு விட்டார். குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்திருக்கிறது.
* குற்றம் செய்த எவரும் முதலமைச்சர் ஆட்சியில் தப்பித்து விட முடியாது.
* அண்ணா பிளீஸ் அடிக்காதீங்க... அடிக்காதீங்க... என்றபோது நாங்கள் என்ன யார் அந்த அண்ணா... என்று எழுதி ஒட்டினோமா?
* சட்டம் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும் என்பதிலே முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார்.
* பெண்கள் பாதுகாப்பு என்பதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை சமரசமே கிடையாது என்று கூறினார்.