தமிழ்நாடு செய்திகள்
தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அந்தரங்க உரிமைக்கு எதிரானது: சென்னை உயர்நீதிமன்றம்
- குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது.
- குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல.
சிபிஐ பதிவு செய்த வழக்கு தொடர்பாக சென்னையைச் சேர்ந்த கிஷோர் என்பவரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்க உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்திருந்தது. மத்திய அரசு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்யக்கோரி கிஷோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "குற்றங்களை கண்டுபிடிக்க ஒருவரின் தொலைபேசி உரையாடல்கள், தரவுகளை ஒட்டுக்கேட்க முடியாது. இது அந்தரங்க உரிமைக்கு விரோதமானது.
குற்றச்செயல்களை கண்டறிவதற்காக தனிநபரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்பது அனுமதிக்கதக்கது அல்ல" என நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் பொது அவசரம், பொது பாதுகாப்பு ஏதம் சம்பந்தப்படவில்லை என்பதால் அனுமதி ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.