தமிழ்நாடு செய்திகள்

காட்பாடி-ஜோலார்பேட்டை பயணிகள் ரெயில் ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2024-12-06 07:22 IST   |   Update On 2024-12-06 07:22:00 IST
  • பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
  • ஜோலார்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

வேலூர்:

அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வளத்தூர்-மேல்பட்டி இடையே இன்று காலை 10.55 மணி முதல் மதியம் 2.55 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

காட்பாடியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News