தமிழ்நாடு செய்திகள்

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு - பயணிகள் அச்சம்

Published On 2025-07-09 12:20 IST   |   Update On 2025-07-09 12:20:00 IST
  • வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது.
  • ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.

நெல்லையில் இருந்து சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரெயிலில் ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த புகைமூட்டத்தை பார்த்த பயணிகள் அச்சமடைந்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் வேல்வார்கோட்டை அருகே வந்தே பாரத் ரெயில் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஏ.சி.யில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டு 30 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் அவதிக்குளாகினர்.

நேற்று கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்று தனியார் பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News