தமிழ்நாடு செய்திகள்

கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரெயிலில் இருந்து தள்ளி விட்ட குற்றவாளிக்கு சாகும் வரை சிறை..!

Published On 2025-07-14 18:14 IST   |   Update On 2025-07-14 18:14:00 IST
  • ரெயிலில் கர்ப்பிணிக்கு பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
  • கர்ப்பிணி தடுக்கவே, ரெயில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்.

திருப்பூர் மாவட்டம், கந்தம்பாளையத்தில் வசித்துவரும் ஆந்திர மாநிலம், சித்தூர், மங்கலசமுத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி ஜோசப்பின் மனைவி ரேவதி (வயது 36) என்ற 4 மாத கர்ப்பிணிப் பெண் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக கடந்த 6-ந்தேதி பிற்பகல் கோயம்புத்தூர் திருப்பதி விரைவு ரெயிலில் பெண்களுக்கான பெட்டியில் பயணித்தார்.

அப்போது ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் அப்பெட்டியில் ஏறிய கே.வி.குப்பம், பூஞ்சோலை கிராமம், சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த ஹேமராஜ் என்பவன் அப்பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்றுள்ளார்.

அதை அப்பெண் தடுக்கவே, அப்பெண்ணை தாக்கி வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சீதாராமன் பேட்டை அருகில் ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில் அந்தப் பெண் பலத்த காயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது கருச்சிதை ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில், ஹேமராஜ் மீது கொலை முயற்சி, பாலியல் தொல்லை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை முடிவில் ஹேமராஜ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், இன்று தண்டனை விவரம் வழங்கப்படும் என அறிவித்தது.

அதன்படி இன்று, மேஹராஜிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News