தமிழ்நாடு செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - விடுதி காவலர் கைது

Published On 2025-06-09 09:16 IST   |   Update On 2025-06-09 09:16:00 IST
  • மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
  • விடுதி காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.

அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News