தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார்

Published On 2025-10-21 12:05 IST   |   Update On 2025-10-21 12:05:00 IST
  • தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.
  • கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* ராட்சத பலம் வாய்ந்த தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. சேர வேண்டும்.

* அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.

* தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.

* தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது.

* சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவை எடுக்காததால் தோல்வி அடைந்தார்.

* பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால் துணை முதல்வராக உள்ளார்.

* சரியான முடிவை எடுக்காததால் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

* கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News