தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார்
- தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.
- கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ராட்சத பலம் வாய்ந்த தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. சேர வேண்டும்.
* அ.தி.மு.க. - த.வெ.க. கூட்டணி சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம்.
* தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுப்பவர் தான் நல்ல தலைவர்.
* தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவன் நினைத்தாலும் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது.
* சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி சரியான முடிவை எடுக்காததால் தோல்வி அடைந்தார்.
* பவன் கல்யாண் சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்ததால் துணை முதல்வராக உள்ளார்.
* சரியான முடிவை எடுக்காததால் வைகோவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
* கூட்டணி விவகாரத்தில் தி.மு.க. தலைமை மிக சரியாக பயணிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.