தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை மக்களே உஷார்... 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Published On 2025-08-23 07:28 IST   |   Update On 2025-08-23 07:28:00 IST
  • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யும்.
  • சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

சென்னை:

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசனாது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும், சென்னையிலும் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவாரூர், நாகையில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News