தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் போலீஸ் உஷார்- பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு

Published On 2025-05-19 13:20 IST   |   Update On 2025-05-19 13:20:00 IST
  • முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
  • சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குண்டு வைப்பதற்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதிகளான சிராஜ், அமீர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேலும் பலர் இருப்பது தெரியவந்து உள்ளது. அவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதனை தொடர்ந்து நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அந்த வகையில் தமிழகத்திலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்கள் அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் ஆகியவற்றில் சந்தேக நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பது பற்றியும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்கள், கிளாம்பாக்கம் பஸ் நிலையம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் ஆகியவற்றிலும் உயர் அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தி உள்ளனர்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினால் அது பற்றி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News