தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணம் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம்

Published On 2025-05-20 18:53 IST   |   Update On 2025-05-20 19:11:00 IST
  • அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு.
  • 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில், தி.மு.க இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது கல்லூரி மாணவி வன்கொடுமை புகார் அளித்துள்ளார். ஆனார் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. தன்னை குற்றவாளிகள் போல் காவல்துறை நடத்துகின்றன. அரசியல் தலையீடு காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண்களை திருமணம் செய்து அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சி செய்கிறார். இதில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த மாணவி தெரிவித்தார்.

மாணவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்து. இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் அளித்த விளக்கத்தில்,

* அரசியல் கட்சியினர் தலையீட்டால்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறுவது தவறு

* 10ஆம் தேதி அன்றே அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* 20 வயதுள்ள பெண்கள் 20 பேர் பாதிப்பு என்று கூறும் பெண் அவர்களை பறறிய தகவல்களை கூறவில்லை.

* அரசியல் பிரமுகரின் பி.ஏ.-வுக்கு இரையாக்க முயற்சித்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானது.

இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.

Tags:    

Similar News