தமிழ்நாடு செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு- அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2025-10-21 17:00 IST   |   Update On 2025-10-21 17:00:00 IST
  • செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News