தமிழ்நாடு செய்திகள்

கோவை காவல்நிலையத்தில் ஒருவர் தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2025-08-06 10:17 IST   |   Update On 2025-08-06 10:17:00 IST
  • தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
  • தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை:

கோவை பெரிய கடைவீதி காவல்நிலையத்தில் முதலாவது மாடியில் உள்ள க்ரைம் உதவி ஆய்வாளர் அறையில் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நபர் நேற்று இரவு 11 மணி அளவில் காவல் நிலையத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்ட நபர் குறித்த தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் உயிரிழந்த நபர் எதற்காக காவல்நிலையத்திற்கு வந்தார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

இச்சம்பவம் குறித்து அறிந்து வந்த தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News