தமிழ்நாடு செய்திகள்

50 சதவீத வரியை போடச் சொன்னதே மோடிதான்: ஆ.ராசா தாக்கு

Published On 2025-09-02 14:16 IST   |   Update On 2025-09-02 14:16:00 IST
  • மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள்.
  • அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக எம்.பி. ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.

Tags:    

Similar News