தமிழ்நாடு செய்திகள்
உலக அகதிகள் தினம்: போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்! - மு.க.ஸ்டாலின்
- பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!
- “அகதிகள் முகாம்” என்பதை “மறுவாழ்வு முகாம்” எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்!
உலக அகதிகள் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் உலகெங்கிலும் உள்ள அகதிகளை கௌரவிக்கும் ஒரு சர்வதேச தினமாகும். உலக அகதி நாள் ஆண்டுதோறும் ஜூன் 20-ந்தேதி நினைவுகூரப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் உலக அகதிகள் தினமான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பொல்லாத போர்களின் மோசமான விளைவே நாடற்ற மனிதர்கள்!
மனிதத்தைக் கொல்லும் போர்களால் வாழ்விழந்து ஏதிலிகளாய் புலம்பெயர்ந்தவர்களை அன்பால் அரவணைப்போம்!
நமது #DravidianModel-இல் "அகதிகள் முகாம்" என்பதை "மறுவாழ்வு முகாம்" எனப் பெயர் மாற்றி, அன்னைத் தமிழ் உறவுகளின் மாண்பைப் போற்றினோம்! வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாக்கிறோம்!
போரை மாய்ப்போம்! மனிதம் காப்போம்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.