தமிழ்நாடு செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்- மு.க.ஸ்டாலின்

Published On 2025-07-01 12:01 IST   |   Update On 2025-07-01 12:01:00 IST
  • எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தோர் எத்தனை பேர் வெற்றி என்றுதான் அதிகாரிகளிடம் கேட்பேன்.
  • தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகி விட்டனர்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நான் முதல்வன் திட்டம் 3-ம் ஆண்டு வெற்றி விழா, வெற்றி நிச்சயம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* நான் முதல்வன் திட்டத்தில் என் நம்பிக்கையை காப்பாற்றும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்.

* ஒவ்வொரு குழந்தைகள் வெற்றிபெறும் போதும் தந்தை போல் மகிழ்ச்சி அடைகிறேன்.

* எந்த ரிசல்ட் வந்தாலும் நான் முதல்வன் திட்டத்தில் படித்தோர் எத்தனை பேர் வெற்றி என்றுதான் அதிகாரிகளிடம் கேட்பேன்.

* கடந்த 3 ஆண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை 3.28 லட்சம் பேர் முன்னணி நிறுவனங்களில் வேலை பெற்றுள்ளனர்.

* யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற 57 போட்டித் தேர்வர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள்.

* தமிழ்நாட்டை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் தயாராகி விட்டனர்.

* வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பேராசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து திறன் பயிற்சி சான்று வழங்கி உள்ளோம்.

* 18 முதல் 35 வயது வரை உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

* தமிழ்நாடு என்றால் சிறந்த கல்வி, திறனறிவு, எதிர்காலத்திற்கு வழிகாட்டுவதாய் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News