சாதி எனும் 1000 ஆண்டு அழுக்கை போக்குவது தான் நமது நோக்கம் - மு.க.ஸ்டாலின்
- மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் போன்றது, பெண்களின் முன்னேற்றம் இதய துடிப்பு போன்றது.
- வெறுப்பு அரசியலை விடவும் அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது ஆற்றல் வாய்ந்தது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்திப்பிடிக்கும் இயக்கம் திராவிட இயக்கம்.
* கொள்கை பிடிப்பு மிக்க அரசியல் தலைவராக திருமாவளவன் இருக்கிறார்.
* சமூக நீதியை நிலைநாட்டக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது.
* கடந்த 4 ஆண்டுகளில் 6,900-க்கும் அதிகமாக சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி உள்ளோம்.
* மாணவர்களின் முன்னேற்றம் கண்கள் போன்றது, பெண்களின் முன்னேற்றம் இதய துடிப்பு போன்றது.
* மகளிருக்கான கட்டணமில்லா பயண திட்டத்தில் ஆதிதிராவிடர் சமூக சகோதரிகள் அதிக பயனடைந்துள்ளனர்.
* பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் தொல்குடி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
* சாதி எனும் 1000 ஆண்டு அழுக்கை போக்குவது தான் நமது நோக்கம்.
* ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரத்தை கொடுத்ததுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்திய மாற்றம்.
* வெறுப்பு அரசியலை விடவும் அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது ஆற்றல் வாய்ந்தது.
* சாதிய பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்.
* சாதிய ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்று நமது மனதில் ஏற்பட்டுள்ள மாற்றம் அனைவரது மனதிலும் ஏற்பட வேண்டும்.
* சமூக பணிகளாலும் சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை சாத்தியப்படுத்துவோம்.
* ஆதிதிராவிடர், பழங்குடியினரின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும்.
* சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் 10 கிராமங்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது.
* இந்தாண்டும் சிறந்த 10 கிராமங்களுக்கு சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள்ளது.
* திருவள்ளுவர் நாளன்று அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.