தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது - மு.க.ஸ்டாலின்
- திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கலைஞர் கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள்.
- தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும்.
திருவாரூர்:
திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது:
* வேளாண்மையும் கலையும் செழித்து வளரும் திருவாரூர் மண்ணில் கலைஞரின் கொள்கை வாரிசாக விழாவில் பங்கேற்கிறேன்.
* திருவாரூர் என்றாலே திருவாரூர் தேரும், கலைஞர் கருணாநிதியும் தான் நினைவுக்கு வருவார்கள்.
* தொட்ட துறையில் எல்லாம் வெற்றி பெற்று தொலைநோக்கு பார்வையால் நவீன தமிழகத்தை உருவாக்கியவர் கலைஞர்.
* மற்ற மாவட்டங்களில் உங்களில் ஒருவன் என பேசும் என்னை திருவாரூர் மக்கள் மட்டும் எங்களில் ஒருவன் என அழைக்கின்றனர்.
* தம்பிமார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையிலும் சிறந்தவர்கள் என அண்ணா கூறுவார்.
* அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உயரத்தில் மட்டுமல்ல அவரது செயல்பாடுகளாலும் உயர்ந்து நிற்கிறார்.
* செய்தி சேனல் வளர்ச்சியை டிஆர்பி மதிப்பை வைத்து சொல்வது போல் தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியை டி.ஆர்.பி. ராஜாவை வைத்து சொல்லலாம்.
* 22 ஆண்டுகள் ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை நவீன முறையில் புதுப்பித்து இயங்க வைத்தவர் கலைஞர்.
* தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் கரைபுரண்டு ஓடும்.
* திருவாரூரில் 2.37 லட்சம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர்.
* தமிழகத்தில் தொழில்துறை தலைநிமிர்ந்து நிற்கிறது.
* ஓடாத ஆழித்தேரை ஓட வைத்தவர் கலைஞர் கருணாநிதி.
* திருவாரூரில் சிப்காட் வளாகங்கள் அமைக்கும் முயற்சிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
* திருவாரூரில் மட்டும் இதுவரை ரூ.143 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது.
* நன்னிலம், பட்டாம்பாளையத்தில் புதிதாக மாதிரி பள்ளி அமைக்கப்படும்.
* திருவாரூரில் பழமை வாய்ந்த ஜூபிலி மார்க்கெட்டில் ரூ.11 கோடி மதிப்பில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும்.
* மன்னார்குடியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும்.
* திருத்துறைப்பூண்டியில் நெல் ஜெயராமனுக்கு திருவுருவச் சிலை நிறுவப்படும்.
* திருவாரூரில் வாய்க்கால், நீர் மதகுகள் உள்ளிட்டவை 43 கோடி ரூபாயில் புதுப்பிக்கப்படும்.
* இடையூறாக இருக்கும் மத்திய அரசையும் சமாளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.