தமிழ்நாடு செய்திகள்

மின்னணு பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

Published On 2025-04-30 11:01 IST   |   Update On 2025-04-30 11:01:00 IST
  • ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.
  • ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மின்னணு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

* நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் மின்னணு உதிரி பாகங்கள் சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

* மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு இணையாக இந்த திட்டத்தில் grant வழங்கப்பட்டுள்ளது.

* ஊக்கத்தொகை கொடுக்கிறோம் என்று உறுதி அளித்துவிட்டு தமிழ்நாடு அரசு கொடுக்காமல் இருந்ததில்லை.

* தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கையால்தான் முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகள் செய்கின்றனர்.

* ரூ.1.2 லட்சம் கோடி அளவிற்கான மின்னணு பொருட்கள் நடப்பாண்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

* தமிழ்நாட்டில் ரூ.30000 கோடி முதலீடுகளை ஈர்த்து 60000 நபர்களுக்கு வேலை வழங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News