தமிழ்நாடு செய்திகள்

எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும் - ராமதாஸ் பேச்சுக்கு சேகர்பாபு கேள்வி

Published On 2025-05-17 12:40 IST   |   Update On 2025-05-17 12:40:00 IST
  • முதலில் அவருடைய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்க வேண்டும்.
  • மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்.

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:

* முதலில் அவருடைய பிரச்சனைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வி பற்றி நிர்ணயிக்க வேண்டும். வெற்றி தோல்வி பற்றி கருத்து சொல்ல வேண்டும்.

* அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே குத்து, வெட்டு நடந்துகொண்டு இருக்கிறது. இவர்கள் எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்.

* மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள், மக்களை பற்றி கவலைப்படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள்.

* மக்களை நாடி செல்பவர் தான் உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியும். மக்களுடைய சேவகராக இருக்க முடியும். அந்த கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News