தமிழ்நாடு செய்திகள்

அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது அடிமைத்தனம் - சேகர்பாபு

Published On 2025-06-23 10:30 IST   |   Update On 2025-06-23 10:30:00 IST
  • ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
  • மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழ்நாட்டில் 71,000 கோவில்கள் இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

* ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

* சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும். அதன்பின் பேசட்டும்.

* பா.ஜ.க.வினருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டது அ.தி.மு.க.

* பெரியார், அண்ணா மட்டுமின்றி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரைதான் அண்ணாமலை வசைபாடி உள்ளார்.

* அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது.

* யார் பலம் வாய்ந்தவர்கள்? என நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுகிறது.

* நயினார் நாகேந்திரன் பச்சைத்துண்டுடனும், அண்ணாமலை காவி துண்டுடனும் சுற்றுகின்றனர்.

* மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

* அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News