தமிழ்நாடு செய்திகள்
நயினார் நாகேந்திரனின் தலைவர் பதவி நாட்கள் எண்ணப்படுகிறது- அமைச்சர் சேகர்பாபு பதிலடி
- அமைச்சர் சேகர்பாபு துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார்.
- அங்கே இருக்கிற தலைவர்கள் அண்ணாமலை உட்பட எல்லோரும் அதற்கான ‘கவுண்டவுனை’ தொடங்கி விட்டார்கள்.
சென்னை:
இந்து அறநிலையத் துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று துறைமுகம் தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம் தி.மு.க.வின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளிக்கும்போது, 'நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருக்கும் நாட்கள்தான் எண்ணப்பட்டு வருகிறது.
அந்த நாட்கள் எண்ணுவதற்கு அங்கே இருக்கிற தலைவர்கள் அண்ணாமலை உட்பட எல்லோரும் அதற்கான 'கவுண்டவுனை' தொடங்கி விட்டார்கள்' என்றார்.