தமிழ்நாடு செய்திகள்
மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்: அமைச்சர் ராஜ கண்ணப்பன்
- மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான்.
- அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்.
வால்பாறையில் சில தினங்களுக்கு முன்னதாக சிறுமி ஒருவரை சிறுத்தை, தூக்கிக் கொண்டு சென்று தாக்கியது. பின்னர் அந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ராஜ கண்ணப்பன் "மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான். அரசுத் தரப்பில் இழப்பீடு வழங்குகிறோம்" எனப் பதில் அளித்துள்ளார்.
மிருகங்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மோதுமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பதற்குப் பதிலாக மனிதர்களை யானைகள் உள்ளிட்ட மிருகங்கள் தாக்குவது வழக்கம்தான் என பதில் அளித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.