தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1363 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2025-05-01 09:56 IST   |   Update On 2025-05-01 09:56:00 IST
  • மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
  • மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது.

சேலம்:

தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1363 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

மேலும் அணையின் நீர்மட்டம் 107.75 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்து கணிசமாக இருப்பதால் கோடையிலும் மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

Tags:    

Similar News