தமிழ்நாடு செய்திகள்

மே தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம்

Published On 2025-05-01 09:09 IST   |   Update On 2025-05-01 09:09:00 IST
  • சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் மே 1-ந்தேதியன்று சர்வதேச தொழிலாளர்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மே 1 உழைப்பாளர் தினமான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மே தின பூங்காவில் உள்ள தூணுக்கு மலர் வளையம் வைத்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

செஞ்சட்டை அணிந்து வந்து மே தின பூங்கா நினைவு சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொ.மு.க. நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News