உலகம்

ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி

Published On 2025-05-18 15:13 IST   |   Update On 2025-05-18 15:54:00 IST
  • மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர்.
  • அதிகாலையில் ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன்(வயது59). இவரது மனைவி சஜிதா(53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்படும் ஒரு ஓட்டலில் மாடியில் இருக்கும் அறையில் வசித்து வந்தனர். 

இந்தநிலையில் அதிகாலையில் அந்த ஓட்டலில் கியாஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் பங்கஜாக்சன், சஜிதா ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னையில் வசித்துவரும் அவரது மகள் ஓமன் விரைந்துள்ளார்.

Tags:    

Similar News