கீரணத்தம் பகுதியில் நாளை மின்தடை
- கேவி அலைன்ஸ்மால் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
- மின்வினியோகம்பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை இருக்கும்.
கோவை:
கீரணத்தம், கேவி சகாரா மற்றும் கேவி அலைன்ஸ்மால் துணை மின்நிலையத்தில் நாளை (18-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
எனவே அந்த வழித்தடங்களில் இருந்து மின்வினியோகம்பெறும் பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கீரணத்தம் துணைமின்நிலையத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:-
கீரணத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திப்பாளையம், சரவணம்பட்டியின் ஒரு பகுதி, விஸ்வாசபுரம், ரெவின்யூ நகர், கரட்டுமேடு, விளாங்குறிச்சியின் ஒரு பகுதி, சிவானந்தபுரம், சக்தி ரோடு, சங்கரா வீதி, ரவி தியேட்டர், விநாயகபுரம், எல்.ஜி.பி. நகர், உதயா நகர், ஹவுசிங் காலனி, அன்னை வேளாங்கன்னி நகர், சாவித்திரி நகர், கணபதி மாநகர், குறிஞ்சி நகர், சேரன் மாநகர் ரோடு, விளாங்குறிச்சி ரோடு. மேற்கண்ட தகவலை கு.வடமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.