ஆணவக் கொலைகள்: நம்முடைய சமுதாய அமைப்பை மாற்றணும் - கமல்ஹாசன்
- இனி ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது.
- சரிவர என் கடமையை செய்வேன்.
சென்னை:
டெல்லியில் இருந்து சென்னை வந்த எம்.பி. கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வெளியில் இருந்து கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்த இடத்தை, உள்ளே இருந்து பார்க்கிறேன். அங்கு இருக்கும் கடமை, பெருமை புரிகிறது. இனி ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு நாடு முதல்ல தமிழ்நாடு. இதுதான் என்னுடைய நோக்கம். அதுக்காகத்தான் இங்கே இருந்து போய் இருக்கேன். இது முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன். அங்கு என்ன பேசப்போகிறேன் என்பதை இங்க சொல்லக்கூடாது என்பது தான்.
ஆணவக் கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னாடியில் இருந்து நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கான அடிநாதம் கட்சிகள் மட்டும் இல்லை. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்றணும். கட்சிகள் வரும், போகும்.. நாடு நடந்துக்கொண்டே இருக்கும் என்றார்.