தமிழ்நாடு செய்திகள்

ஜெய்சங்கர் சாலை - புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

Published On 2025-09-26 11:32 IST   |   Update On 2025-09-26 11:34:00 IST
  • சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்தார்.
  • மந்தைவெளியில் எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ் சினிமாவின் "ஜேம்ஸ்பாண்ட்" என்று அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர், சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப் பாதையில் 1964 - 2000 வரை வசித்து வந்தார்.

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற வேண்டும் என்று நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்து இருந்தார். இதையடுத்து சாலையின் பெயரை மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரி பாதைக்கு ஜெய்சங்கர் சாலை என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

இதேபோன்று சென்னை மந்தைவெளி 2-வது குறுக்கு தெருவிற்கு எஸ்.வி.வெங்கடராமன் தெரு என்ற புதிய பெயர் சூட்டப்பட்ட பெயர் பலகையையும் அவர் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News