தமிழ்நாடு செய்திகள்

மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது ஃபெஞ்சல் புயல்- லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-29 10:44 IST   |   Update On 2024-12-01 06:15:00 IST
2024-11-29 15:40 GMT

ஃபெங்கல் புயல் காரணமாக கூட்டுறவுத்துறை விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் 7ம் தேதி செங்கல்பட்டில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-29 15:39 GMT

ஃபெங்கல் புயல் மற்றும் கனமழையால் வங்கி சேவையில் நாளை எந்த பாதிப்பும் இருக்காது எனவும், வங்கிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் எனவும் அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

2024-11-29 15:25 GMT

ஃபெங்கல் புயல் நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும்.

2024-11-29 15:10 GMT

அண்ணா பல்கலை.யின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

2024-11-29 15:07 GMT

புயல் நாளை கரையை கடக்கும்போது, கனமழை, சூறாவளி என்பதால் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

2024-11-29 15:06 GMT

புயல் நாளை கரையை கடக்கும்போது, கனமழை, சூறாவளி என்பதால் பொது மக்கள் வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

2024-11-29 14:45 GMT

ஈசிஆர், ஓம்ஆர் சாலையில் நாளை பிற்பகல் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தம். ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஈசிஆர், ஓம்ஆர் சாலையில் நாளை பிற்பகலில் பேருந்துகள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-29 14:27 GMT

ஃபெங்கல் புயலின் வேகம் மணிக்கு 15 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது.

2024-11-29 14:22 GMT

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2024-11-29 12:58 GMT

மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News