தமிழ்நாடு செய்திகள்

போட்டிக்கான டிக்கெட் வைத்திருந்தால் மெட்ரோவில் இலவசமாக பயணம் செய்யலாம்

Published On 2025-03-30 07:36 IST   |   Update On 2025-03-30 07:36:00 IST
  • இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.
  • ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

சென்னை:

மெட்ரோ ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இன்று பிரேசில் லெஜண்ட்ஸ்-இந்திய லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்காக, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, கட்டணமில்லா பயணத்தை வழங்குவதற்காக உடன்பாடு செய்துள்ளது. கால்பந்து போட்டிக்கான பயணச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பிரத்யேக மெட்ரோ பயணம் வழங்கப்படும்.

கால்பந்து போட்டிக்கு வருபவர்கள் போட்டிக்கான நுழைவுச் சீட்டுகளில் உள்ள தனித்துவமான கியூ ஆர்-கோர்டு குறியீட்டை தானியங்கி நுழைவு எந்திரத்தில் 'ஸ்கேன்' செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகையை ஒரு சுற்றுப் பயணத்துக்கு பயன்படுத்தலாம்.

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News