தமிழ்நாடு செய்திகள்

திருப்பத்தூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் பலி

Published On 2025-06-24 07:47 IST   |   Update On 2025-06-24 07:47:00 IST
  • தந்தையை இழந்த வெற்றியை அவரது தாய் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து படிக்க வைத்துள்ளார்.
  • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வீட்டை இடிக்கும் பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் வெற்றி என்ற 14 வயது பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையை இழந்த வெற்றியை அவரது தாய் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து படிக்க வைத்துள்ளார். இந்த நிலையில், சுவர் இடிந்து விழுந்ததில் வெற்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News