தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறது- சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
- கடலூர் கல்லூரி மாணவர் ஜெய சூர்யாவின் தந்தை எம்.முருகன் வழக்கு.
- ஆணவக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை.
தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த கடலூர் கல்லூரி மாணவர் ஜெய சூர்யாவின் தந்தை எம்.முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விபத்தில் உயிரிழந்த தன் மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், உடன்படித்த மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவியை காதலித்ததால், அவரின் உறவினர்கள் அடிக்கடி மிரட்டியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அப்போது, தமிழகத்தில் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. ஆணவக் கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடலூர் கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவக் கொலை என்ற சந்தேகம் உள்ளதால் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.