தமிழ்நாடு செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2025-06-26 07:55 IST   |   Update On 2025-06-26 07:55:00 IST
  • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
  • ஆற்றுப் பகுதிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

ஒகேனக்கல்:

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதன்காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனை தொடர்ந்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்தானது, நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 18,000 கனஅடியாக இருந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 24,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாப் பணிகளின் பாதுகாப்புக் கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடையானது இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.

Tags:    

Similar News