ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது.
- ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் மைசூரு, மாண்டியா மாவட்டங்கள், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.
மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், கனகபுரா, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது. கர்நாடகாவிலும் பெய்த மழையும் குறைந்தது. இதனால் நீர்வரத்து சற்று சரிந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிகிறது.
ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.