தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற முடியும் - அரசு தரப்பு வாதம்

Published On 2025-12-12 12:18 IST   |   Update On 2025-12-12 12:18:00 IST
  • திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான்.
  • மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மனு மீது ஐகோர்ட் மதுரை கிளையில் விசாரணை தொடங்கியது.

நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் விசாரிக்கின்றனர்.

திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண வேண்டுமெனில் அமைதியாக இருங்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி மறுத்த நீதிபதிகள் அமைதியாக இருக்குமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தினர். வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னரே இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிலையில் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினர்.

தமிழக அரசு தரப்பு வாதத்தில்,

ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லா ஒருவர் தாக்கல் செய்த மனுவை பொதுநல வழக்கு போல் பாவித்து தனிநீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். கோவில் நிர்வாகத்தில் தொடர்பில்லாதவரின் மனுவை விசாரித்து அதன் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவிட இயலாது.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ளது தீபத்தூண் இல்லை. எல்லைக்கல் தான். 73 ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் ஒரு இடத்தில் தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கார்த்திகை தினத்தில் பின்பற்றப்படும் வழிமுறைகளே இந்தாண்டும் திருப்பரங்குன்றத்தில் பின்பற்றப்பட்டது. வழக்கம்போல் திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இந்தாண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் 1912-க்கு பின்னர் இருமுறை மதப்பிரச்சனை எழுந்துள்ளது.

இந்தாண்டு தனிநீதிபதி மலை மீது தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தபோது நிலவிய சீரற்ற நிலைமையை சீர் செய்யவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தனிநபர் தீபமேற்ற முடியாது. சிக்கந்தர் தர்கா அருகில் உள்ளது தீபத்தூண் அல்ல.

மனுதாரர் உள்நோக்கத்தோடு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் என்பது அழுத்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டது.

உச்சிப்பிள்ளையார் கோவிலில் உள்ள தீபத்தூணில் தான் ஏற்றுவது வழக்கம். திருப்பரங்குன்றத்தில் தேவஸ்தானமே தீபம் ஏற்ற முடியும் என்று அரசு தரப்பில் விவாதம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் மலையில் சர்வே நடத்தியதில் தீபத்தூண் தான் என உறுதி செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மலையில் உள்ள நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவிற்கு சொந்தமானவை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News