தமிழ்நாடு செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய ஞானசேகரனின் மனு தள்ளுபடி

Published On 2025-04-08 18:20 IST   |   Update On 2025-04-08 19:08:00 IST
  • சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது.
  • ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் தரப்பு வாதம்.

அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி ஞானசேகரன் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்கு உள்ளது. ஆதாரம் இல்லாததால் விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய ஞானசேகரின் மனுவை தள்ளுபடி செய்தார்.

ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்தும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

Similar News