தமிழ்நாடு செய்திகள்

அப்பா, அம்மா என்ற பெயரை மாற்றி விடாதீர்கள் என்ற இ.பி.எஸ். பேச்சுக்கு எ.வ.வேலு பதிலடி

Published On 2025-10-09 09:26 IST   |   Update On 2025-10-09 09:26:00 IST
  • ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
  • கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாணார்பாளையம் பகுதியில் நேற்று இரவு திரண்டிருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

மருத்துவமனைகளில், 'பயனாளிகள்' என்று சொல்ல வேண்டுமாம். பெயர் வைக்கிறதுக்கு ஒரு விவஸ்தை வேண்டாமா? அப்பா, அம்மா என்ற இரண்டு பெயரை மட்டும் தயவு செய்து மாற்றி விடாதீர்கள். விட்டால், அந்த பெயர்களையும் மாற்றி விடுவார். எல்லாவற்றுக்கும் இரண்டாவது பெயர் வைக்கும், இப்படிப்பட்ட முதல்வரை எங்கும் பார்க்க முடியாது என்று பேசினார்.

இந்நிலையில் அப்பா, அம்மா என்ற பெயரை மாற்றி விடாதீர்கள் என்ற எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி உணர்வு மிக்கவர்.

* ஏறி வந்த ஏணியை மிதித்து தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.

* தன்னை போலவே அனைவரையும் எண்ணுகிறார் இ.பி.எஸ்.

* மருத்துவ பயனாளர்கள் என கூறுவதில் என்ன தவறு இருக்கிறது.

* கம்பராமாயணத்தை எழுதியவர் கம்பர் என்ற கூட சொல்ல தெரியாதவர் இ.பி.எஸ்.

* பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். புகைப்படத்தை வைக்க பயப்படுபவர்கள்.

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து பேசும் முன் யோசித்து பேச வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News