தமிழ்நாடு செய்திகள்

விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தை ரத்து செய்த இ.பி.எஸ்.- காரணம் என்ன?

Published On 2025-09-05 11:37 IST   |   Update On 2025-09-05 11:37:00 IST
  • முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார்.
  • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது.

தேனி:

'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி தேனி மாவட்டத்தில் நேற்று முதல் 2 நாள் பிரசாரம் செய்ய திட்டமிட்டார்.

முதல் நிகழ்ச்சியாக ஆண்டிபட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசினார். இன்று காலை தேனியில் உள்ள தனியார் விடுதியில் விவசாயிகள், வணிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாக இருந்த நிலையில் ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய தகவலை வெளியிடுவதாக செய்தி வந்தது. இதனையடுத்து தேனியில் நடைபெற இருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தான் பிரசாரம் செய்யும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்கு நிலவும் பிரச்சனைகள் குறித்து வணிகர் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமி தேனியில் கூட்டத்தை ரத்து செய்தது கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News