தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க., சீமான் கட்சிக்கு அழைப்பு விடுத்த EPS: கடை விரித்தும் யாரும் வரவில்லை என துரைமுருகன் விமர்சனம்

Published On 2025-07-22 13:11 IST   |   Update On 2025-07-22 13:11:00 IST
  • EPS கடை விரித்தும் யாரும் வரவில்லை.
  • கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சி பேரணி மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் பிரசாரத்தின்போது திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

முன்னதாக திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது "திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வலிமையாக உள்ளது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் தொடர்வோம்" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு தெரிவித்திருந்தார்.

நேற்று த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்தார். இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "EPS கடை விரித்தும் யாரும் வரவில்லை. கடை விரித்து யாரும் வரவில்லை என்றால் வாங்க சார் என்றுதான் அழைக்க வேண்டும்" என துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

234 தொகுதிகளிலும் திமுகவுக்கு Bye, Bye மற்றும் மு.க. ஸ்டாலினுக்கு Bye, Bye ஹேஷ்டேக்கை முன்னெடுத்து வருகிறாரே? என்ற கேள்விக்கு "அந்த அளவிற்கு வந்துவிட்டாரா?" என்றார்.

எடப்பாடி பழனிசாமி அழைப்பை நாம் தமிழர் கட்சி சீமான நிராகரித்துள்ளார்.

Tags:    

Similar News